
என்றோ எழுதி வைத்த நினைவுகள்
இன்று நெஞ்சினில் ஆடுது தன்னாலே!!
எழுதிய நினைவுகள் யாவும் இன்று
காகித கப்பலாய் முழ்குது தன்னாலே!!
ரோஜாவும் இன்று தன்
முட்களால் குத்துது தன்னாலே!!

பழகிய நாட்களின்
ஈர கசிவு நெஞ்சினில்
இன்னும் இருக்க
உன் வயதும் என் வயதும்
கொஞ்சம் தடை சொல்ல
மூத்தவளே உனை
ஏன் நேசித்தேன்?

பள்ளி முடிந்து
நான் வீடு செல்ல மறந்து
சென்றேன் தோழனுடனே
சற்றே சுற்றி திரியவே
வீடு திரும்ப நாளியாக
தகப்பன் நின்றார் பிரம்போடு
செத்தோம் என்று நான் எண்ண
வந்தாய் நீயும் தெய்வமாய்
ஒரு போய் சொல்லி
எனைக் காப்பாற்றினாய்
அந்த சின்ன வயதினிலே
உன்னை எனக்கும் பிடித்தது
அதை மடலாய் எழுதி வைத்தேன்
உன்னிடம் கொடுப்பதற்க்கு!!

பிடுங்கி எரிந்தார்கள்
என் சகோதிரிகளே!!
அன்று சொல்லா
என் மனதை இன்றும்
சொல்ல துடிகின்றேன்
நீ இன்னும்
மண-மா(காதலால்)!!

No comments:
Post a Comment