தமிழன்பனின் தமிழின்பம்
Monday, March 12, 2007
Sunday, February 18, 2007
தமிழ் தாகம்
Saturday, January 27, 2007
காலங்களின் கோலங்கள்
அந்த ஆத்தங்கரை ஓரத்திலே
ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தோம்
அந்த வாழ்க்கை ஏங்கு போனதுவோ
அந்த நினைவுகள் கண்களிலே
இன்னும் படமாய் மலந்திருக்க
அதை கொஞ்சம் நினைக்கையிலே
கண்களில் நீர் வழிய.........
அந்த வாழ்க்கை இனி
இங்கு வாராதோ
அந்த சுகம் இனி
நம்மை சேராதோ
அந்த காற்று நமை இனி
தீண்டாதோ
நம் உள்ளம் கவலை மறந்து
பாடாதோ
ஏன் இந்த மனித வாழ்க்கை?
சிறு வயதில் இன்பத்தின் சேர்க்கை
போகும் காலத்தில் துன்பத்தின் கோர்க்கை
இது மனித உயிர்க்கு விதிக்க பட்ட விதியா?
Friday, January 26, 2007
அருள்வாயே

வாழ்வின் போதையில் திலைத்தேன்
பாவம் செய்ய அஞ்ஞேன்
புண்ணியம் செய்ய மறந்தேன்

கண்ணிருந்தும் குருடனாய்
கண்ட இடம் போனேன்
மதியிருந்தும் மனிதாய்
வந்த பயனை மறந்தேன்
ஆலயமென்ற ஆழ்மனதை
சாக்கடை என்றே ஆக்கினேன்

உனை நினைத்து விட்டேன் - முருகா
எனை மறு - பதனிடு செய்து விட்டேன்
நாளை என்ற ஒர் நாளில்
இந்த எளியோனுக்கு அருள்வாயோ
பாவ பட்ட மனித வாழ்வினிலிருந்து
மோச்சம் பெற்று தருவாயோ!

இப்பிறப்பும் எனக்கு வேண்டாம்- இனி
எப்பிறப்பும் எனக்கு வேண்டாம்
பிறவா வரம் தந்து என்னை மனிப்பாயா!!
Sunday, January 21, 2007
இன்று நாளை
விதைத்து-விட்டேன்
இனிய இலட்சியங்கள்
நினைத்து-விடேன்
அழகிய ஆசைகள்
செதுக்கி விட்டேன்
எழிய ஏணிப்படிகள்
நாளை!!
விதைத்த விதைகள்
வேர் விடப்படும்
நினைத்த ஆசைகள்
நிறை வேறட்டும்
செதுக்கிய ஏணிப்படிகள்
வெற்றிப்படிகள் ஆகட்டும்
தமிழனே
Monday, January 15, 2007
காதலால்

என்றோ எழுதி வைத்த நினைவுகள்
இன்று நெஞ்சினில் ஆடுது தன்னாலே!!
எழுதிய நினைவுகள் யாவும் இன்று
காகித கப்பலாய் முழ்குது தன்னாலே!!
ரோஜாவும் இன்று தன்
முட்களால் குத்துது தன்னாலே!!

பழகிய நாட்களின்
ஈர கசிவு நெஞ்சினில்
இன்னும் இருக்க
உன் வயதும் என் வயதும்
கொஞ்சம் தடை சொல்ல
மூத்தவளே உனை
ஏன் நேசித்தேன்?

பள்ளி முடிந்து
நான் வீடு செல்ல மறந்து
சென்றேன் தோழனுடனே
சற்றே சுற்றி திரியவே
வீடு திரும்ப நாளியாக
தகப்பன் நின்றார் பிரம்போடு
செத்தோம் என்று நான் எண்ண
வந்தாய் நீயும் தெய்வமாய்
ஒரு போய் சொல்லி
எனைக் காப்பாற்றினாய்
அந்த சின்ன வயதினிலே
உன்னை எனக்கும் பிடித்தது
அதை மடலாய் எழுதி வைத்தேன்
உன்னிடம் கொடுப்பதற்க்கு!!

பிடுங்கி எரிந்தார்கள்
என் சகோதிரிகளே!!
அன்று சொல்லா
என் மனதை இன்றும்
சொல்ல துடிகின்றேன்
நீ இன்னும்
மண-மா(காதலால்)!!








