ஆறறிவு கொண்ட உயிர்-இங்கே
பாவத்தைக் குவிக்கிறதே
புண்ணியம் கொண்ட மண்ணில்-தினம்
இரத்தத்தை தெளிக்கிறதே
மதங்கள் என்ற பேரில்-மனித
உயிர்கள் அழிகின்றதே
எங்கேயும் உயிரின் தியாகம்
பூலோகம் என்ன ஆகும்
உன்னையே நீ அழித்தாய்
மிருகமாய் மாறி போனாய்
நடக்கும் துயரம் யாவுமே
தெய்வத்தின் கோபமா
தெய்வ கோபம் தீரவே
வழி ஏதும் உள்ளதோ
மனித மனித நீயே சொல்லாயோ
நீ கண்ட மதங்கள் யாவும்
அன்பையே வாரி வழங்கும்
அன்பென்ற சொல்லில் தானே
தெய்வமே வந்து போகும்
மதம் பிடித்த மனித உயிர்
கண்ணைக் கொஞ்சம் திறந்திடுமோ
அன்பென்ற வார்த்தையிலே
ஒன்று கூடி மகிழ்ந்திடுமோ
மனிதா மனிதா நீயே சொல்லாயோ
Thursday, January 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment