Wednesday, January 10, 2007

காதல் என்பது......

காதல் வெறும் கதையா
இல்லை வெறும் கனவா
என் அன்பே என் அன்பே
நீயே சொல்லு

அன்பென்றாய் உயிரென்றாய்
நீயில்லை வாழ்வென்றாய்
தவிக்கின்றேன் துடிக்கின்றேன்
நீ சொன்ன வார்த்தையிலே

அந்த மாலை பொழுதினிலே
அந்த மயங்கும் வேளையிலே
அந்த ஒவ்வொரு மணித்துளியும்
எந்தன் மரண படுக்கையிலும்
மறவேனே மறவேனே
எந்தன் கண்மணியே

மோகம் உண்டு காமம் உண்டு
காதல் இல்லையே
அழுதிட்டால் அணைத்திட்டால்
எல்லாம் பொய்யே
தனிமையைத் தேடி வந்தேன்
எல்லாம் உன்னாலே

No comments: