வாழ்க்கை ஒர் பூந்தோட்டம்அதில் முள்ளும் உண்டு
மலரும் உண்டு
நண்பன் உண்டு
பகைவன் உண்டு
இன்பம் உண்டு
துன்பம் உண்டு
இதில் என்ன வேண்டும் நண்பா

காதலிக்கும் நேரத்திலே
காதலிலை அணைத்திருப்பாய்
காதலி பிரிந்து விட்டால்
போதையில் திலைத்திருப்பாய்
பள்ளிக்கூட நாட்களிலே
நண்பணோடு சேர்ந்திருப்பாய்
நண்பர் கூட்டம் பிரிந்துவிட்டால்
சோகத்தில் திலைத்திருப்பாய்

வாழ்கின்ற நாட்களிலே
நல்லதை நினைத்துவிடு
தர்மங்களைச் சேர்த்துவிடு
தெய்வ அருள் தேடிவிடு
இனிதே சிரித்துவிடு
நல்லதே நடக்கும் நண்பா

No comments:
Post a Comment