
இந்த மலரினில் தேனில்லை
அந்த வண்டுக்கும் கண்ணில்லை
வட்ட பூமியும் சுற்றவில்லை
நீ என்னை பிரிந்ததனாலே!!
அந்த வண்டுக்கும் கண்ணில்லை
வட்ட பூமியும் சுற்றவில்லை
நீ என்னை பிரிந்ததனாலே!!

என் காதலை சொல்ல வந்தேன்
தென்றலாய் மாறி வந்தேன்
சூரியனாய் சுட்டெரித்தாய்
அய்யோ கொடுமை பெண்ணே !

என் அன்பே உன் இதயம் கல்லரையா
அதில் ஈரம் இல்லையா
என் காதல் வெறும் கனவா-இல்லை
தொடர்கதையா நீ சொல்லு ....

பூங்காற்றே நீ
தூது செல்வாயோ
என் காதலை சொல்வாயோ
அவள் மனதைக் கரைப்பாயோ
என் காதலை சொல்வாயோ
அவள் மனதைக் கரைப்பாயோ
அழகிய மலரிலும் முள்ளிருக்கும்
அந்த பகலிலும் நிலவிருக்கும்
உன் மனதில் காதல் வந்தால்
என்னை நான் மறப்பேனே

அழகே வந்துவிடு
அந்த பகலிலும் நிலவிருக்கும்
உன் மனதில் காதல் வந்தால்
என்னை நான் மறப்பேனே

அழகே வந்துவிடு
உன் அன்பை வாரி தந்துவிடு
நீ வந்தால் வாழ்ந்திருப்பேன்
நீ சென்றால் உயிரினை மறப்பேன்
நீ வந்தால் வாழ்ந்திருப்பேன்
நீ சென்றால் உயிரினை மறப்பேன்

No comments:
Post a Comment