
காதல் கொண்டு மனம் உருகி
மாலை மதுவில் தினம் கசிந்து
மயங்கியே சிற்றின்பம் கண்டு வந்தோம்!!
இது மட்டுமே வாழ்வல்ல
காணும் யாவும் நிஜமல்ல
பொய்மை உரைக்கும் பூவுலகில்
யாவும் அவனின் மாயையே!!
அறிவில் மிகுந்து மனிதகுலம்
கண்டதே பல ஏவுகணை
வஞ்சம் கொண்டு பலிதீர்க்க
உயிர்கள் அழிந்தே போரினிலே!!
அழிக்கும் கடமை தமதாக
மனிதன் அழிக்கும் விலங்காக
எழுந்தான் இன்று சிவனவனே
பொங்கும் கடலென
அழித்தான் இன்னும் பல உயிரை!!
கண் விழிக்குமோ மனித குலம்
வாழ்ந்திடுமோ இனி அன்பே சிவமென்று
நாளைய பொழுது அன்பிற்கினிய
தாகவிடிய வேண்டிடுவோம்!!

No comments:
Post a Comment