Sunday, February 18, 2007

தமிழ் தாகம்





இருள் சூழ்ந்த
வானில்
அங்கங்கே வெளிச்சங்கள்




இதயத்துடிப்பின்
நாதத்தில்
தமிழ்த்தாக கவிதைகள்




இமைக்காமல் பார்க்கிறேன்
இனம் காக்கும் தமிழனை!!
போராட்டங்களைத் தாண்டி
போராளியாய் போர்முனையில்
உயிர் விடும் என் தமிழனை




தமிழனாய் தரணியில்
பிறந்த பெருமையை
நான் கண்டேன் -உன்னாலே
என் ஈழத்தமிழனே!!