
ஆழ்கடலின் ஆழத்தை
அறிந்தவனும் உண்டோ
கடல் அலையின் வேகத்தை
கண்டவரும் உண்டோ?

பூமியில்
நீரின் ஆதிக்கம்
நிலத்தினும்
பெரிது
அது பற்றாமல்
பேராசை நீரே
ஏன் அழித்தாயோ
எங்கள் மனித உயிரை

நீ இல்லா
இடமெங்கும் வரண்டு
கிடக்க!!
வரண்ட பூமியில்
நீ-இல்லாமல்
உயிர்கள் மடிய!!
அங்கு செல்லாமல்ஏன் இங்கு வந்தாய்
அலை வெள்ளமாய்
எங்களை அழிப்பதற்கு!!

No comments:
Post a Comment